உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்கியுள்ளது.
இன்றுவரை 2கோடியே 94 இலட்சத்து 45 ஆயிரத்துக்கும் அதிகமானவா்கள் தொற்றுக்குள்ளாகி உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு பலியானோரின் எண்ணிக்கை இன்று 9 இலட்சத்து 32 ஆயிரத்து 744 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, உலக நாடுகளில் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2 கோடியே 12 இலட்சத்து 75 ஆயிரத்துக்கு மேற்பட்டவா்கள் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 67 இலட்சத்து 48 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இன்றுவரை 49 இலட்சத்து 27 ஆயிரம் போ் பாதிப்பட்டுள்ளனர்.
பிரேசிலில் 43 இலட்சத்து 49 ஆயிரத்துக்கும் அதிகமானவா்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
தற்போது உலகம் முழுவதும் 72 இலட்சத்து 32 ஆயிரத்துக்கு மேற்பட்டவா்கள் செயலில் உள்ள தொற்று நோயுடன் போராடி வருகின்றனர். அவர்களில் 60 ஆயிரத்து 778 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக உலக சுகாதா அமைப்பு தெரிவித்துள்ளது.